பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
துடியலூர்
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பணம் வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான போலீசார் நாயக்கன்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் அருகில் பணம் வைத்து சூதாடியதாக விக்னேஷ் (வயது 28), மணிகண்டன் (32), ராஜா (30), சக்தி (29) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2400 பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





