பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 29 Nov 2022 6:45 PM GMT (Updated: 29 Nov 2022 6:47 PM GMT)

மயிலாடுதுறை அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரகசிய தகவல்

மயிலாடுதுறை அருகே மறையூர் சாலை பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது மறையூர் சாலையில் வயல்வெளி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 4 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

4 பேர் கைது

விசாரணையில் அவர்கள் மயிலாடுதுறை அருகே மறையூர் பெரியதெருவைச் சேர்ந்த அற்புதராஜ் (வயது 47), சித்தர்க்காட்டைச் சேர்ந்த மகேந்திரன் (36), அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (34), டென்னிஸ் குமார் (37) என்பதும். இவர்கள் பணம் வைத்து சீட்டு விளையாடியதும் தெரிய வந்தது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அற்புதராஜ், மகேந்திரன், மணிகண்டன், டென்னிஸ்குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story