பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
x

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

இலுப்பூர் அருகே கல்லிகுளம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக சிறப்புப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த கோவிந்தநாயக்கன்பட்டியை சேர்ந்த தங்கவேல் (வயது 29), செல்லம்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (35), மாரிமுத்து (28), பிலிப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் (47) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டு அட்டைகள், ரூ.1,560, செல்போன் 3, மோட்டார் சைக்கிள், டேபிள், சேர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story