பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

தொண்டி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொண்டி,
திருவாடானை தாலுகா சோளியக்குடி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு மற்றும் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த முகிழ்தகம் கண்ணன்(வயது 60), சோளியக்குடி செல்வராஜ் (57), குமார் (42), கானாட்டாங்குடி மாரியப்பன் (37) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 52 சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





