மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி 4 மாடுகள் பலி


மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி 4 மாடுகள் பலி
x

மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி 4 மாடுகள் பலியான சம்பவம் நடந்துள்ளது.

திருவள்ளூர்

திருப்பாலைவனம்,

திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கோளூர் ஊராட்சியில் அடங்கியது புதுச்சேரிமேடு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகளின் மாடுகள் பக்கத்து கிராமமான ஆண்டார்தோப்பு பகுதியில் உள்ள வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது.

அப்போது விளைநிலங்களில் அமைக்கப்பட்ட மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி அறுந்து விழந்தது. இந்த மின்கம்பியை மிதித்து 4 மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியானது. மேலும் ஒரு கன்று குட்டி மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில் மின்வாரிய அதிகாரிகள் அந்த பகுதியில் மின் வினியோகத்தை தடை செய்தனர். உடனடி நடவடிக்கையால் அந்த பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பல மாடுகளின் உயிர் பாதுகாக்கப்பட்டது. மேலும் பழுதான மின்கம்பிகளை சீரமைத்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story