பாலத்தின் சுவரில் கார் மோதி 4 பேர் காயம்


பாலத்தின் சுவரில் கார் மோதி 4 பேர் காயம்
x
தினத்தந்தி 7 Sep 2023 6:45 PM GMT (Updated: 7 Sep 2023 6:45 PM GMT)

பாவூர்சத்திரம் அருகே பாலத்தின் சுவரில் கார் மோதி 4 பேர் காயம் அடைந்தனர்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் நேற்று முன்தினம் இரவு காரில் நெல்லைக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் பாவூர்சத்திரம் அருகே அடைக்கலப்பட்டணத்துக்கும், சாலைப்புதூருக்கும் இடையே சென்றபோது, அங்குள்ள எட்டுக்கண் பாலம் என்று அழைக்கப்படும் பாலத்தின் சுவரில் எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கி சேதம் அடைந்தது. காரில் இருந்த 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story