திண்டுக்கல் மாவட்டத்தில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல்


திண்டுக்கல் மாவட்டத்தில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல்
x
தினத்தந்தி 13 Oct 2023 9:45 PM GMT (Updated: 13 Oct 2023 9:46 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் சாலையோரங்களில் மழைநீர் தேங்கி 'ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சலை பரப்புகிறது. இதையொட்டி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கான தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனிவார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மேலும் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story