கார் மோதி 4 வயது சிறுமி பலி


கார் மோதி 4 வயது சிறுமி பலி
x
தினத்தந்தி 17 Oct 2023 6:45 PM GMT (Updated: 17 Oct 2023 6:46 PM GMT)

ரிஷிவந்தியம் அருகே கார்மோதி 4-வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள். படுகாயம் அடைந்த அவளது தந்தை ஆஸ்பத்திாியில் அனுமதிக்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்

கார் மோதியது

ரிஷிவந்தியத்தை அடுத்த காட்டுசெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தீர்தமலை மகன் ஆறுமுகம்(வயது 36). இவர் சம்பவத்தன்று தனது 4-வயது மகள் தர்ஷினியை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் அருகே உள்ள கிராமத்துக்கு சென்று விட்டு மீண்டும் எறையூர் சாலை வழியாக வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

காட்டு செல்லூர் தனியார் பள்ளி அருகில் வந்தபோது எதிரே வேகமாக வந்த கார் ஆறுமுகம் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

சிறுமி பலி

இதில்மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த தர்ஷினி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தாள். படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த ரிஷிவந்தியம் போலீசார் பலியான சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஆறுமுகம் மனைவி உஷா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற 4-வயது சிறுமி பலியான சம்பவம் காட்டு செல்லூர் கிராமமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Related Tags :
Next Story