தொடர் விடுமுறையையொட்டி 3 நாட்களில் விவேகானந்தர் மண்டபத்தை 40,700 பேர் பார்வையிட்டனர்


தொடர் விடுமுறையையொட்டி 3 நாட்களில் விவேகானந்தர் மண்டபத்தை 40,700 பேர் பார்வையிட்டனர்
x

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தை 40,700 பேர் பார்வையிட்டனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தை 40,700 பேர் பார்வையிட்டனர்.

சுற்றுலா தலம்

சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வரும் சுற்றுலா வரும் பயணிகள் முக்கடல் சங்கமத்தில் நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்துவிட்டு, கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிடுவார்கள்.

இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த படகு போக்குவரத்து தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

40,700 பேர்

சபரிமலை அய்யப்ப பக்தர்களின் சீசன் மற்றும் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரிக்கு ஏராளமானோர் வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் விவேகானந்தர் மண்டபத்தை படகில் ெசன்று பார்வையிட்டனர். கடந்த 3 நாட்களும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை படகுகள் இயக்கப்பட்டன.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை 13 ஆயிரத்து 400 பேர், நேற்று முன்தினம் 14 ஆயிரத்து 200 பேர், நேற்று 13 ஆயிரத்து 100 பேர் என மொத்தம் 40 ஆயிரத்து 700 பேர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டனர்.


Next Story