நாளை மறுநாள் 44 மின்சார ரெயில்கள் ரத்து


நாளை மறுநாள் 44 மின்சார ரெயில்கள் ரத்து
x

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) 44மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது

சென்னை,

சென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரை-தாம்பரம், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் காலை 11 முதல் மாலை 4.30 மணி வரை 44ரெயில்கள் ரத்து செய்யப்படும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது .

மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பராமரிப்பு பணி காரணமாக 6வது வாரமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் ரெயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.


Next Story