தமிழ்நாட்டில் 44 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு


தமிழ்நாட்டில் 44 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
x

தமிழ்நாட்டில் 44 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் 44 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தாம்பரம் போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக தேன்மொழியும், கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனராக அவினாஷ்குமாரும், காத்திருப்பு பட்டியலில் இருந்த கண்ணன் ஆயுதப்படை ஐ.ஜி.,யாகவும், கரூர் எஸ்.பி.,யாக சுந்தரவதனம், மதுரை எஸ்.பி.,யாக சிவபிரசாத், திண்டுக்கல் எஸ்.பி.,யாக பாஸ்கரன், திருவாரூர், எஸ்.பி.,யாக சுரேஷ்குமார், திருவள்ளூர் எஸ்.பி.,யாக பகேர்லா செபாஸ் கல்யாண், திருவண்ணாமலை எஸ்.பி.,யாக கார்த்திகேயன், மதுரை அமலாக்கப்பிரிவு எஸ்.பி.,யாக வருண்குமார், ராமநாதபுரம் எஸ்.பி.,யாக தங்கராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.











Next Story