தூசி போலீஸ் கட்டுப்பாட்டு பகுதியில் 16 இடங்களில் 45 கண்காணிப்பு கேமராக்கள்


தூசி போலீஸ் கட்டுப்பாட்டு பகுதியில் 16 இடங்களில் 45 கண்காணிப்பு கேமராக்கள்
x

தூசி போலீஸ் கட்டுப்பாட்டு பகுதியில் 16 இடங்களில் 45 கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டுக்கு வந்தன.

திருவண்ணாமலை

தூசி

தூசி போலீஸ் கட்டுப்பாட்டு பகுதியில் 16 இடங்களில் 45 கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டுக்கு வந்தன.

வெம்பாக்கம் தாலுகா தூசி போலீஸ் நிலைய கட்டுப்பாட்டு பகுதியில் மாங்கால் கூட்ரோடு, அய்யங்கார் குளம் கூட்ரோடு, ராந்தம் கூட்ரோடு பகுதி உள்ள கிராமங்களை இணைக்கும் வகையில் 16 இடங்களில் 45 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நிகழ்ச்சிக்கு செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமை தாங்கினார். தூசி இன்ஸ்பெக்டர் குமார் முன்னிலை வகித்தார்.

மாங்கால் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் துணைத் தலைவர் அருள் சம்மந்தம், கண்காணிப்பு கேமரா செயல்பாடுகளை தொடங்கி வைத்தார். இதில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story