புழல் மத்திய சிறையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 46 கைதிகள்


புழல் மத்திய சிறையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 46 கைதிகள்
x

புழல் சிறையில் 46 கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.

சென்னை

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. புழல் சிறையில் உள்ள கைதிகளும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார்கள்.

அதன்படி விசாரணை சிறையில் 10 பேர், தண்டனை சிறையில் 32 பேர், பெண்கள் சிறையில் 4 பேர் என மொத்தம் 46 கைதிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வருகிறார்கள். இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை சிறைத்துறை நிர்வாகம் செய்துள்ளது.


Next Story