தவறாக பயன்படுத்தப்பட்ட 5 மின் இணைப்புகள்


தவறாக பயன்படுத்தப்பட்ட 5 மின் இணைப்புகள்
x
தினத்தந்தி 27 Jun 2023 7:47 PM GMT (Updated: 28 Jun 2023 11:22 AM GMT)

5 மின் இணைப்புகள் தவறாக பயன்படுத்தப்பட்டன.

தஞ்சாவூர்

தஞ்சை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயற்பொறியாளர் கலைவேந்தன் தலைமையில் தஞ்சை மின் பகிர்மான வட்டம், தஞ்சை கோட்டம், திருவையாறு உபகோட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் நேற்று மின் இணைப்பு குறித்து கூட்டாய்வு செய்தனர். உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின்பொறியாளர்கள், வருவாய் பிரிவு அதிகாரிகளை கொண்ட 10 குழுவினர் 527 மின் இணைப்புகளை ஆய்வு செய்தனர். இதில் 5 மின் இணைப்புகளை தவறாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு ரூ.45 ஆயிரத்து 985 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அனைத்து மின் நுகர்வோர்களும் மின் இணைப்புகளை முறையாக பயன்படுத்துமாறும், மின் கட்டணத் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்குமாறும் தஞ்சை செயற்பொறியாளர் கேட்டுக்கொண்டார்.


Next Story