வெவ்வேறு சம்பவங்களில் வழிப்பறி செய்த 5 பேர் சிக்கினர்


வெவ்வேறு சம்பவங்களில் வழிப்பறி செய்த 5 பேர் சிக்கினர்
x

வெவ்வேறு சம்பவங்களில் வழிப்பறி செய்த 5 பேர் சிக்கினர்

மதுரை


மதுரை செல்லூர் தத்தனேரி கணேசபுரத்தை சேர்ந்தவர் சின்ராஜ் (வயது 24). சம்பவத்தன்று இவர் செல்லூர் 60 அடி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது 2 பேர் அவரை வழிமறித்தனர். அவர்கள் கத்தியை காட்டி சின்ராஜை மிரட்டி அவரிடமிருந்த 2 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூடல்நகர் சாந்திநகரை சேர்ந்த இம்ரான்கான் (26), தத்தனேரி மேலகைலாசபுரத்தை சேர்ந்த ரமேஷ்பாண்டியன் (36) ஆகியோரை கைது செய்தனர்.

அதே போன்று அவனியாபுரம் பகுதியை சேர்ந்த பூமுருகன் (37) என்பவரிடம் பணம் பறித்த அவனியாபுரம் பகுதியை சேர்ந்த தமிழரசன் (21), தினேஷ்குமார் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பை-பாஸ்ரோடு பொன்மேனி பகுதியை சேர்ந்த விவேகானந்தன் (37) என்பவரிடம் பணம் பறித்த காளவாசல் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (21) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story