பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருமயம்:
திருமயம் அருகே மேலூர் ஆலங்கண்மாய் கரையில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து திருமயம் ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தமாறன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த பழனியப்பன் (வயது 70), ஆண்டியான் (32), சுப்ரமணியன் (62), சின்னசாமி (60), ஆறுமுகம் (47) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.250 மற்றும் சீட்டு கட்டுகள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





