சாராயம் விற்ற 5 பேர் கைது


சாராயம் விற்ற 5 பேர் கைது
x
தினத்தந்தி 19 May 2023 6:45 PM GMT (Updated: 19 May 2023 6:45 PM GMT)

சாராயம் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, ராஜா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேஷசமுத்திரம் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சோ்ந்த ஜெயராமன்(வயது 63), அம்பிகா(42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் அரசம்பட்டு கிராமத்தில் உள்ள பள்ளி அருகில் சாராயம் விற்ற அதே ஊரை சேர்ந்த ரமேஷ்(44), ஆரூர் கிராமத்தில் சாராயம் விற்ற அர்ச்சுனன் (75), குளத்தூரில் சாராயம் விற்ற செல்வம்(40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து மொத்தம் 150 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story