தமிழகத்திற்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு


தமிழகத்திற்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும்:  கர்நாடகாவுக்கு  காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
x

தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் அடுத்த 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை விடுவிக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Next Story