சிறுமியிடம் தவறாக நடந்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை


சிறுமியிடம் தவறாக நடந்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை
x

சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி

சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

முதியவர்

நெல்லை மாவட்டம் ஆவுடையம்மாள்புரத்தை சேர்ந்தவர் சுயம்புதுரை (வயது 59). இவர் அந்த பகுதியை சேர்ந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் உறவினர், வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுயம்புதுரையை கைது செய்தனர்.

சிறை தண்டனை

இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி அன்புசெல்வி வழக்கை விசாரித்து சுயம்புதுரைக்கு 5 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வக்கீல் உஷா ஆஜரானார்.

இந்த வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எதிரிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசாரை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் பாராட்டினார்.


Next Story