மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் 6 விமானங்கள் ரத்து


மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் 6 விமானங்கள் ரத்து
x

மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது

சென்னை,

வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும். நாளை காலை வரை தீவிர புயலாகவே நகர்ந்து பிறகு சற்றே வலுக்குறைந்து மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தற்போது 520 கி.மீ தென்கிழக்கு திசையில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல் மாலையில் வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.சென்னை - தூத்துக்குடி , சென்னை - சீரடி, சென்னை - மங்களூரு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.


Next Story