6 கிலோ கஞ்சா பறிமுதல்

கன்னிவாடி அருகே 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னிவாடி அருகே உள்ள தெத்துப்பட்டியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 75). சுரக்காய்பட்டியை சேர்ந்தவர் முருகன் (60). இவர்கள் 2 பேரும் சேர்ந்து, தெத்துப்பட்டியில் உள்ள பழனிவேல் வீட்டில் வைத்து கஞ்சா விற்பதாக கன்னிவாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார், பழனிவேல் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிவேல், முருகன் ஆகியோரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





