மாநிலம் முழுவதும் 6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் -தமிழக அரசு தகவல்


மாநிலம் முழுவதும் 6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் -தமிழக அரசு தகவல்
x

தமிழக அரசு வெளிமாநில தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழக அரசு வெளிமாநில தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பதிவு செய்வதற்காக தனியே ஒரு வலைதளம் (https:/labour.tn.gov.in/ism) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வலைத்தளத்தில் இதுவரை சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்கள், தொழிலாளர் துறை அதிகாரிகள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக துறை அலுவலர்கள், வேலையளிப்போர் மூலமாகவும் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களால் சுயமாகவும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story