ரூ.6¾ லட்சம் ஆராய்ச்சி, கல்வி நிதி


ரூ.6¾ லட்சம் ஆராய்ச்சி, கல்வி நிதி
x

ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன, கடன் சங்கம் சார்பில் ரூ.6¾ லட்சம் ஆராய்ச்சி, கல்வி நிதி வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் செயல்பட்டு வரும் மாதனூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆம்பூர் நகராட்சி பள்ளி ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம் தொடங்கப்பட்டது முதல் கடந்த 19 ஆண்டுகளாக தொடர்ந்து லாபத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகள் ஈட்டிய லாபத்தொகையில் சட்டபூர்வ நிதிகளான கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி ரூ.5,25,469, கூட்டுறவு கல்வி நிதி ரூ.1,50,313 என மொத்தம் ரூ.6,75,782-க்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கூட்டுறவு சங்கங்களின் திருப்பத்தூர் மண்டல இணைபதிவாளர் சி.பி.முருகேசனிடம், சங்கத்தின் தலைவர் ஜி.சதீஷ்பாபு காசோலை வழங்கினார். துணைப்பதிவாளர்கள் பாலசுப்பிரமணியன், த.சுவாதி, திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் தர்மேந்திரன், மாதனூர் வட்டார கூட்டுறவு சார்பதிவாளர் பூவண்ணன், செயலாளர் எம்.தண்டபாணி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாளர் எஸ்.தண்டபாணி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story