கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா வைத்திருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் கஞ்சா வைத்திருந்த கிருஷ்ணகிரி ராசுவீதியை சேர்ந்த 18 வயது சிறுவன், பேரண்டப்பள்ளி கொத்தூர் பகுதியை சேர்ந்த குமார் (27), மத்திகிரி அக்கொண்டப்பள்ளி நரேன் பர்மன் (38), சிகரலப்பள்ளி வெங்கடகிரி (65), கொடுகூர் சக்திவேல் (23), ஓசூர் பழைய மத்திகிரி ரகு (19) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த கிருஷ்ணகிரி- சென்னை சாலை பெரிய தெரு அருண்குமார் (45), ராசுவீதி மகபூப் பாஷா (45), ஊத்தங்கரை புதுப்பட்டியை சேர்ந்த மாரி (52), விசுவாசம்பட்டி சின்னபட்டு (60) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.815 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதாக கிருஷ்ணகிரி அவ்வை நகர் ஆறுமுகம் (44), பர்கூர் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி செல்வம் (63) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story