சென்னையில் 4 பேர் உள்பட தமிழ்நாட்டில் 6 பேருக்கு கொரோனா


சென்னையில் 4 பேர் உள்பட தமிழ்நாட்டில் 6 பேருக்கு கொரோனா
x

தமிழ்நாட்டில் நேற்று 225 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

சென்னை,

தமிழ்நாட்டில் நேற்று 225 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் சென்னையில் 4 பேருக்கும், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரியில் தலா ஒருவருக்கும் என தமிழ்நாட்டில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 3 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 30 ஆக உள்ளது. இதேபோல, தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story