61 நாள் மீன்பிடி தடைகாலம் நிறைவு: படகுகளுக்கு பூஜை போட்டு ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்..!


61 நாள் மீன்பிடி தடைகாலம் நிறைவு: படகுகளுக்கு பூஜை போட்டு ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்..!
x
தினத்தந்தி 15 Jun 2023 3:28 AM GMT (Updated: 15 Jun 2023 4:36 AM GMT)

61 நாள் மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

சென்னை,

மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனும், சென்னை காசிமேடு முதல் கன்னியாகுமரி வரை மீன்பிடி தடைக்காலம் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது.

இந்த மீன்பிடி தடைக்காலத்தில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்யும் விசைப்படகுகள், இழுவை படகுகள் ஆகியவை மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட எல்லை வரை சிறியவகை படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர்.

இந்தநிலையில் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக படகுகளுக்கு பூஜை செய்து மீண்டும் மீன்பிடிக்க மீனவர்கள் உற்சாகமாக கடலுக்கு சென்றனர். சென்னை காசிமேடு, நாகப்பட்டினம் உள்ளிட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஒருவாரம் கடலில் தங்கி மீன்பிடிக்க தேவையான உணவு பொருட்கள் மற்றும் மீன்களை பதப்படுத்த ஐஸ் கட்டிகள், டீசல், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் படகுகளில் வைத்துள்ளனர்.


Next Story