650 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


650 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

திருப்பத்தூரில் 650 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

அதன் பேரில் நகராட்சி துப்புரவு அலுவலர் இளங்கோ, ஆய்வாளர் குமார், திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள வி.சி.எம். தெரு பகுதியில் 4 கடைகளில் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 650 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கடைகளுக்கு தலா ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story