மெட்ரோ ரெயிலில் ஏப்ரல் மாதம் 66.85 லட்சம் பேர் பயணம் - சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தகவல்


மெட்ரோ ரெயிலில் ஏப்ரல் மாதம் 66.85 லட்சம் பேர் பயணம் - சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தகவல்
x

மெட்ரோ ரெயிலில் ஏப்ரல் மாதம் 66.85 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னையில் மெட்ரோ ரெயில் மூலம் கடந்த ஜனவரி மாதத்தில் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பயணிகளும், பிப்ரவரி மாதம் 63 லட்சத்து 69 ஆயிரத்து 282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69 லட்சத்து 99 ஆயிரத்து 341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66 லட்சத்து 85 ஆயிரத:து 432 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக கடந்த மாதம் 28-ந்தேதி 2 லட்சத்து 68 ஆயிரத்து 680 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் மட்டும் கியு.ஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 23 லட்சத்து 39 ஆயிரத்து 724 பயணிகள், பயண அட்டைகளை பயன்படுத்தி 39 லட்சத்து 83 ஆயிரத்து 119 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 3 லட்சத்து 56 ஆயிரத்து 489 பயணிகள், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 4 ஆயிரத்து 136 பயணிகள் மற்றும் சிங்காரா சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 1,964 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

கியுஆர் குறியீடு, பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.


Next Story