மதுபோதையில் வாகனம் ஓட்டிய 69 பேருக்கு அபராதம்


மதுபோதையில் வாகனம் ஓட்டிய 69 பேருக்கு அபராதம்
x
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் மது போதையில் வாகனங்களை இயக்குபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்படி மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலைய பகுதிகளில் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது தர்மபுரி உட்கோட்டத்தில் 15 பேரும், பாலக்கோடு உட்கோட்டத்தில் 19 பேரும், அரூர் உட்கோட்டத்தில் 18 பேரும், பென்னாகரம் உட்கோட்டத்தில் 17 பேரும் மது போதையில் வாகனத்தை ஓட்டி வந்த போது போலீசாரிடம் சிக்கினார்கள். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மது போதையில் சிக்கிய 69 பேருக்கு ரூ.6.9 லட்சம் அபராதம் விதித்தனர்.

1 More update

Next Story