காங்கிரஸ் நிர்வாகிகள் 7 பேர் கைது

சீமானின் உருவபொம்மையை எரிக்க முயன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் சீமானின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சீமானின் உருவபொம்மையை பிடுங்கி, போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





