பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
x

பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் ரோந்து சென்றனர். அப்போது பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த திருவள்ளுவர் தெருவை சேர்ந்த அருண்குமார்(வயது 35), வினோத்குமார்(34), வெங்கடேசபுரத்தை சேர்ந்த சத்ரியன்(25), நீல்ராஜ் என்ற நீலமேகம்(50), உதயசூரியன்(47) மதனகோபாலபுரத்தை சேர்ந்த ராஜ்(46), மேட்டு தெருவை சேர்ந்த ரமேஷ்(56) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.2 ஆயிரத்து 810 பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story