பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
x

பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

அரிமளம் அருகே கல்லுகுடியிருப்பு அம்மன் கோவில் பகுதியில் பொது இடத்தில் பணம் வைத்து சூதாடுவதாக கே.புதுப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த 7 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பணம், சூதாட்ட அட்டைகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.


Related Tags :
Next Story