நெல்லை புதிய பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் 7½ பவுன் நகை அபேஸ்


நெல்லை புதிய பஸ் நிலையத்தில்  மூதாட்டியிடம் 7½ பவுன் நகை அபேஸ்
x

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் 7½ பவுன் நகை அபேஸ் செய்தது தெரியவந்தது

திருநெல்வேலி

நெல்லை:

வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி வசந்தா (வயது 60). இவர்கள் 2 பேரும் பாளையங்கோட்டையில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் ஊருக்கு செல்லக்கூடிய பஸ்சில் ஏறினர். பின்னர் வசந்தா தனது பையை பார்த்தார். அப்போது பையில் வைத்திருந்த 7½ பவுன் நகை மாயமாகி இருந்தது. அதனை யாரோ மர்ம நபர் நைசாக அபேஸ் செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தா இதுகுறித்து மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story