75-வது சுதந்திர தினவிழா: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு


75-வது சுதந்திர தினவிழா: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
x

75-வது சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகள் ஊறுகாய், அல்வா கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆலந்தூர்,

இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர தினவிழாவை சீா்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக மத்திய உளவு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் ரெயில், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

5 அடுக்கு பாதுகாப்பு

சென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி சந்தேகப்படும் வாகனங்களை பாதுகாப்பு படையினா் மோப்ப நாய் உதவியுடன் தீவிரமாக சோதனையிடுகின்றனா்.

வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா்கள் மூலம் பரிசோதிக்கின்றனா். விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாா் ரோந்து சென்று தீவிரமாக கண்காணிக்கின்றனா். விமான நிலைய காா் பாா்க்கிங் பகுதியில் நீண்டநேரமாக நிற்கும் காா்களை வெடிகுண்டு நிபுணா்கள் தீவிரமாக சோதனையிட்டு விசாரிக்கின்றனா்.

24 மணிநேர கண்காணிப்பு

சென்னை விமான நிலையத்தில் பாா்வையாளா்கள் வருகைக்கான தடை ஏற்கனவே அமலில் இருப்பதால் அதை மேலும் தீவிரமாக செயல்படுத்துகின்றனா். பாஸ்கள் வழங்குவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அப்பகுதியில் ஏற்கனவே உள்ள கண்காணிப்பு கேமராக்களுடன் தற்போது கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை அமைத்து விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணிக்கின்றனா்.

அல்வா, ஊறுகாய்க்கு தடை

விமான பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் ஒரு முறை பாதுகாப்பு சோதனை நடத்தப்படுகிறது. குறிப்பாக பயணிகள் கைகளில் எடுத்து வரும் கைப்பைகளை துருவி துருவி சோதனை செய்கின்றனா்.

பயணிகள் ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானங்களில் சரக்கு பாா்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து பாா்சல்கள் அனைத்தையும் பலகட்ட சோதனைக்கு பின்பே விமானங்களில் ஏற்ற அனுமதிக்கின்றனா்.

முன்கூட்டியே வரவேண்டும்

விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால் உள்நாட்டு பயணிகள், விமானம் புறப்படும் நேரத்துக்கு 1½ மணிநேரம் முன்னதாகவும், சா்வதேச பயணிகள் 3½ மணி நேரத்துக்கு முன்னதாகவும் வருவதற்கு சென்னை விமானநிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனா்.

சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வருகிற 20-ந் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும்.

தற்போதைய 5 அடுக்கு பாதுகாப்பு வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படும் என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story