80 மணல் மூடைகள் பறிமுதல்

80 மணல் மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
காரியாபட்டி
திருச்சுழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் திருச்சுழி குண்டாற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குண்டாற்றுப்பகுதியில் ஒரு வேனில் 80 மணல் மூடைகள் அனுமதியின்றி மணல் ஏற்றிக் கொண்டு இருந்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் உடனடியாக அந்த வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொட்டம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 28) என்பவரை கைது செய்தனர். மேலும் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





