80 மணல் மூடைகள் பறிமுதல்


80 மணல் மூடைகள் பறிமுதல்
x

80 மணல் மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விருதுநகர்

காரியாபட்டி

திருச்சுழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் திருச்சுழி குண்டாற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குண்டாற்றுப்பகுதியில் ஒரு வேனில் 80 மணல் மூடைகள் அனுமதியின்றி மணல் ஏற்றிக் கொண்டு இருந்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் உடனடியாக அந்த வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொட்டம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 28) என்பவரை கைது செய்தனர். மேலும் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story