800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x

கேரளாவுக்கு ஜீப்பில் கடத்திய 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்

உத்தமபாளையம் பகுதியில் இருந்து கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்ல இருப்பதாக உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், உத்தமபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் பாண்டி மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கம்பம்மெட்டு 3-வது கொண்டைஊசி வளைவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஜீப்பை மறித்து அவர்கள் சோதனை செய்தனர். அதில் 800 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னமனூரை சேர்ந்த ஜீப் டிரைவர் சுரேஷ் (வயது 42) என்பவரை கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது.


Next Story