90 விநாயகர் சிலைகள் காமராஜ்சாகர் அணையில் கரைப்பு


90 விநாயகர் சிலைகள் காமராஜ்சாகர் அணையில் கரைப்பு
x
தினத்தந்தி 20 Sep 2023 9:15 PM GMT (Updated: 20 Sep 2023 9:15 PM GMT)

ஊட்டியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 90 விநாயகர் சிலைகள் காமராஜ்சாகர் அணையில் கரைக்கப்பட்டது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 90 விநாயகர் சிலைகள் காமராஜ்சாகர் அணையில் கரைக்கப்பட்டது.

விசர்ஜன ஊர்வலம்

நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்து முன்னனி, சிவசேனா, விசுவ இந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி சார்பில் சுமார் 500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அங்கு பக்தர்கள் வழிபாடு நடத்தி வந்தனர். அந்த சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் துப்பாக்கி ஏந்திய சிறப்பு படையை சேர்ந்த போலீசார் பாதுகாப்பு, டிரோன் கேமரா கண்காணிப்பும் இருந்தது.

இந்தநிலையில் நேற்று ஊட்டியில் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. ஊட்டி தேவாங்கர் மண்டபத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. இதில் இந்து முன்னணி உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களின் 90 விநாயகர் சிலைகள் வாகனங்களில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

அணையில் கரைப்பு

மேள-தாளம் முழங்க சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, காபிஹவுஸ் ரவுண்டானா, மார்க்கெட், மெயின் பஜார், மின்வாரிய ரவுண்டானா வரை ஊர்வலம் நடந்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் ஊட்டி அருகே காமராஜ்சாகர் அணைக்கு விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டன.

இதைத்தொடர்ந்து காமராஜ்சாகர் அணைக்கு கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் படகு மூலம் கரைக்கப்பட்டது. வீடுகளில் வைக்கப்பட்ட சிலைகளும் கரைக்கப்பட்டன. ஊட்டியில் விசர்ஜன ஊர்வலம் நடந்ததால், முக்கிய வீதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இன்று(வியாழக்கிழமை) விசுவ இந்து பரிசத் சார்பில் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது.


Next Story