உண்டியல்களில் ரூ.99 லட்சம் காணிக்கை


உண்டியல்களில் ரூ.99 லட்சம் காணிக்கை
x
தினத்தந்தி 22 Jun 2023 8:30 PM GMT (Updated: 23 Jun 2023 10:45 AM GMT)

உண்டியல்களில் ரூ.99 லட்சம் காணிக்கையாக கிடைத்துள்ளது

திருச்சி

சமயபுரம்:

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் செலுத்தும் காணிக்கைகள், கோவில் நிர்வாகம் சார்பாக மாதம் 2 முறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் 2-வது முறையாக நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் காணிக்கையாக ரூ.99 லட்சத்து 29 ஆயிரத்து 515 ரொக்கமும், 2 கிலோ, 877 கிராம் தங்கமும், 4 கிலோ 899 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.


Next Story