திருமானூரில் சுவர் இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பலி


திருமானூரில் சுவர் இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பலி
x

திருமானூரில் சுவர் இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

அரியலூர்

சுவர் இடிந்து விழுந்தது

திருவண்ணாமலை மாவட்டம் சின்னையன் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி கண்மணி. இவர்களுடைய மகன் ரித்விக் (வயது 2). கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாரிமுத்து தனது குடும்பத்துடன் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட மேலகருப்பூர் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார்.நேற்று முன்தினம் அங்கிருந்து அவரது உறவினர் வீட்டிற்கு சென்ற போது அவர்களது குழந்தை ரித்விக் வீட்டின் முன்பு உள்ள திண்ணையில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக திண்ணையில் இருந்த சுவர் இடிந்து ரித்விக் மீது விழுந்தது.

குழந்தை பலி

இதில் படுகாயம் அடைந்த ரித்விக்கை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரித்விக் பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story