டிராக்டர் மோதியதில் 3 வயது சிறுமி பலி


டிராக்டர் மோதியதில் 3 வயது சிறுமி பலி
x

டிராக்டர் மோதியதில் 3 வயது சிறுமி பலியானாள்

ராணிப்பேட்டை

ஆற்காடு

டிராக்டர் மோதியதில் 3 வயது சிறுமி பலியானாள்.

திமிரியை அடுத்த தாமரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். அரிசி ஆலையில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் யாழினி (வயது 3) நேற்று மாலை வீட்டின் எதிரே விளையாடிக் கொண்டிருந்தாள்.

அப்போது திமிரியிலிருந்து ஆரணி நோக்கி சென்ற டிராக்டர் யாழினி மீது மோதியது. இதில் யாழினி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள். இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து யாழினியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story