சிதம்பரத்தில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


சிதம்பரத்தில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x

சாலையில் காரை ஓட்டி வந்த போது திடீரென டயர் வெடித்து காரில் தீப்பிடித்துள்ளது.

கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த வைத்தியநாதசாமி என்பவர், தனது ஆம்னி காரை பழுது நீக்கம் செய்த பிறகு ஓட்டிப்பார்த்துள்ளார். அதிக மக்கள் நடமாட்டம் மிகுந்த கடலூர் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் சாலையில் காரை ஓட்டி வந்த போது திடீரென டயர் வெடித்து காரில் தீப்பிடித்துள்ளது.

அந்த சமயம் காரில் 4 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். கார் தீப்பிடித்ததும் உடனடியாக அவர்கள் காரை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த சம்பவத்தில் 2 பேருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் தீயணைப்புத்துறையினர், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து காரில் பயணம் செய்தவர்கள் கூறுகையில், பல நாட்களாக ஒர்க்ஷாப்பில் நின்ற கார் பழுதுநீக்கம் செய்யப்பட்டு ஓட்டிப்பார்க்கும் போது தீப்பிடித்து எரிந்ததாக தெரிவித்துள்ளனர்.




Next Story