விக்கிரவாண்டி அருகே லாரி மோதி பள்ளத்துக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்


விக்கிரவாண்டி அருகே லாரி மோதி பள்ளத்துக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:46 PM GMT)

விக்கிரவாண்டி அருகே லாரி மோதி பள்ளத்துக்குள் சரக்கு வாகனம் பாய்ந்த விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

பள்ளத்துக்குள் பாய்ந்தது...

ரெட்டணை அருகே பெரமண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகமுத்து (வயது 60). நாரேறிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் அஜித் (25), லோகநாதன்.

இவர்கள் 3 பேரும் நேற்று காலை மணிலா பயிர்கள் உள்ள மூட்டைகளை ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பெரமண்டூரில் இருந்து விக்கிரவாண்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு புறப்பட்டனர்.

மினி லாரியை லோகநாதன் ஓட்டினார். பேரணி கூட்டுரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி எதிர்பாரதவிதமாக சரக்கு வாகனத்தின் பின்னால் மோதியது.

இந்த விபத்தில் லோகநாதனின் கட்டு்ப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையோர பள்ளத்தில் தறிகெட்டு ஓடி அங்கிருந்த மரத்தில் மோதி நின்றது.

3 போ் காயம்

இதில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த லோகநாதன், அஜித், நாகமுத்து ஆகியோர் காயமடைந்தனர்.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story