புகையிலை பொருட்கள் விற்ற ஒருவர் மீது வழக்கு


புகையிலை பொருட்கள் விற்ற ஒருவர் மீது வழக்கு
x

புகையிலை பொருட்கள் விற்ற ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர்

வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நொய்யல் குறுக்கு சாலை பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடையில் அதே பகுதியை சேர்ந்த கோபால் (வயது 48) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றுக்கொண்டிருந்தார். இதையடுத்து கோபால் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

1 More update

Next Story