தொழிலாளியை தாக்கிய தம்பி மீது வழக்கு


தொழிலாளியை தாக்கிய தம்பி மீது வழக்கு
x
தினத்தந்தி 22 April 2023 6:45 PM GMT (Updated: 22 April 2023 6:46 PM GMT)

சொத்தை எழுதி தருமாறு கேட்டு தொழிலாளியை தாக்கிய தம்பி மீது வழக்கு

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள தென்குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரம்(வயது 45). தொழிலாளியான இவருக்கு வீட்டுமனையுடன், வீடும் சேர்த்து 4 சென்ட் அளவில் உள்ளது. இதை அவரது தம்பி சண்முகம்(38) என்பவர் தனது பெயருக்கு எழுதி தருமாறு கேட்டு சுந்தரத்தை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து சுந்தரத்தின் மனைவி கவிதா கொடுத்த புகாரின் பேரில் சண்முகம் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story