பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு


பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
x

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அருள்மொழி கிராமத்தை ேசர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி புனிதா (வயது 38). இவர் தனது தோட்டத்தில் விறகு எடுக்க சென்றபோது அதே பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் என்பவர் புனிதாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து புனிதா அளித்த புகாரின் பேரில் தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story