காரைக்காலில் மருத்துவரை தாக்கியதாக 31 பேர் மீது வழக்குப்பதிவு


காரைக்காலில் மருத்துவரை தாக்கியதாக 31 பேர் மீது வழக்குப்பதிவு
x

தொழில் போட்டியால் கிளினிக்கை சேதப்படுத்திய நிலையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காரைக்கால்,

காரைக்கால் அடுத்த அம்பகரத்தூரில் மருத்துவரை தாக்கியதாக 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொழில் போட்டியால் கிளினிக்கை சேதப்படுத்தியதுடன், மருத்துவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து மருத்துவர், ரத்த காயங்களுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். தொழிற்போட்டியால் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்ற நிலையில் இது தொடர்பாக 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Next Story