அக்காள் கணவர் மீது வழக்கு பதிவு


அக்காள் கணவர் மீது வழக்கு பதிவு
x

அக்காள் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை காந்திநகரை சேர்ந்தவர் அழகேஸ்வரி (வயது 26). இவருடைய கணவர் செந்தூர். வக்கீலான இவரும், அழகேஸ்வரியும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் தற்போது ஆத்திப்பட்டியில் வசித்து வருகின்றனர். அதேபகுதியில் அழகேஸ்வரியின் அக்காளும் வசித்து வருகிறார். அழகேஸ்வரியின் அக்காள் கணவர் குருநாதன்.

காதல் திருமணம் செய்ததால் அழகேஸ்வரி மீது குருநாதன் கோபத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அழகேஸ்வரி காந்தி நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட வந்துள்ளார். அப்போது அங்கு வந்த குருநாதன் அழகேஸ்வரியை திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அழகேஸ்வரி, தனது அக்காளிடம் கூறுவதற்காக ஆத்திப்பட்டிக்கு சென்றார். அப்போது அவரை குருநாதன் பின் தொடர்ந்து வந்தார். இதையடுத்து அழகேஸ்வரியின் துப்பாட்டாவை வைத்து அவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அழகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார், குருநாதன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story