கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு


கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு
x

கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 50), விவசாயி. இவர் நேற்று தனது பசுமாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அதில் ஒரு மாடு மதியம் 2 மணியளவில் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதனைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் ½ மணிநேரம் போராடி கிணற்றில் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.


Next Story