கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டது.
பெரம்பலூர்
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 45). விவசாயி. இவர் பசு மாடு வளர்த்து வருகிறார். நேற்று இவர் மாடு மேய்க்க ஓட்டி சென்றபோது கிருஷ்ணாபுரம் தனியார் பள்ளி அருகே உள்ள கிணற்றில் அந்த மாடு தவறி விழுந்தது. இது பற்றி உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் இறங்கி பசுமாட்டை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.
Related Tags :
Next Story