பஸ் மோதி மாடு பலி


பஸ் மோதி மாடு பலி
x

திருவண்ணாமலை அருகே பஸ் மோதி மாடு இறந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கிளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 55), மாட்டு வண்டி வைத்து தொழில் செய்து வருகிறார்.

இவர் தினமும் மாட்டு வண்டியில் திருவண்ணாமலை மார்க்கெட்டிற்கு செல்வது வழக்கம். அதன்படி இன்று காலை மாட்டு வண்டியில் அவர் கிளிப்பட்டிலிருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது செல்வபுரம் அருகே செல்லும்போது பின்னால் வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக மாட்டு வண்டியின் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட சம்பத்திற்கு படுகாயம் ஏற்பட்டது.

மேலும் மாட்டு வண்டியில் பூட்டப்பட்டிருந்த மாடு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story